வியாழன், 12 டிசம்பர், 2019

கிரகப் பெயர்ச்சிகளும் பரிகாரங்களும்




தற்பொழுதெல்லாம் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதற்கான பரிகாரங்களும் செய்தித் தாள்கள், இணையதளம் மற்றும் இதர ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாய் பக்தித் தலங்களாக இருந்த நம்முடைய ஆலயங்கள் எல்லாம் பரிகாரத் தலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆலயங்களில் மூல மூர்த்திகளின் வழிபாடுகல் குறைந்து கிரகங்கள் வழிபாடு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் தவறான ஒன்றாகும். கிரக மாற்றங்கள் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரும் என்பதை இந்து மதம் ஏற்றுகொண்டிருக்கிறது. அதன் காரணமாய் கிரக வழிபாடுகளும் அனுமதிக்கப்படுகிறது. எனினும் கிரக பெயர்ச்சி விளைவுகளிலிருந்து தற்காத்து கொள்வதற்கு கிரக வழிபாடு மட்டுமின்றி, இறைவனிடம் பூரண சரணாகதி அடைவதே சிறந்த வழியாகும். கிரகப் பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சியினை மிகுந்த வலிமை உடையதாக கருதப்படுகிறது. சனி பெயர்ச்சியின் தீய விளைவுகளிலிருந்து விடுபட பல பரிகாரங்களும் சொல்லப்படுகிறது. சனி பெயர்ச்சி மட்டும் அல்லாது இதர பெயர்ச்சிகளின் சாதகமில்லாத நிலையிலிருந்து விடுபட திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தினை( இத் தொடரில் அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 7 இல் கோளறுப் பதிகம் இடம் பெற்றுள்ளது) தொடர்ந்து படித்துவர உரிய பலன்கள் கிடைக்கும். சனி கிரகப் பரிகாரம் மட்டும் வேண்டுபவர்கள் சனிக்கான கீழ்கண்ட  ஸ்லோகத்தை படித்துவர நன்மையுண்டாகும்

வஜ்ர தேஹாய காலாக்னி ருத்ராய
அமித தேஜஸே ப்ரமாஸ்த்ர நம்ப
நாமஸ்மை நமஸ்தே: ருத்ர மூர்த்தயே
மர்க்கடேச மஹா ஸ்வாஹ
சர்வசோஹ விநாசக சத்ரு சம்ஹாய
ரக்ஷ ஸ்ரீய தாஹாயே தேஹிமே: