திங்கள், 13 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 33


கல்வி நலம் தரும் சகலகலாவல்லிமாலை

ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் கலைமகளை நோக்கிப் பாடிய சகலகலாவல்லி மாலையை தினந்தோறும் ஓதும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி நிலையில் மேம்படவும் கல்வீல் வெற்றியினைப் பெறவும் கலைமகளின் அருள் நிச்சயம் கிட்டும். இந்தப் பதிகத்துடன் அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் தொடர் நிறைவு பெறுகிறது. இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டப் பாடல்கள் தவிர தமிழில் ஏராளமான அருட்பதிகங்கள் உள்ளன. பன்னிருத் திருமுறைகள், திவ்ய பிரபந்தம், அருணகிரியார் பாடலகள், கந்த புராணம், பெரிய புராணம், கம்ப ராமாயணம் இது போன்று என்ணற்ற நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் படித்து இறைவனது அருள் பெற்று வளமுடன் வாழ வேண்டுகிறேன்.நன்றி.


வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 

வெள்ளி, 10 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 32


அனைத்தும் நல்கும் அபிராமி அந்தாதி

திருக்கடையூர் அபிராமி அம்மன் மீது அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி அருள் மழைப் பொழியக்கூடிய அற்புதமாகும். அந்தாதியாகப் பாடிய நூறுப்பாடல்களும் ஒவ்வொன்றும் ஒரு பலனை அளிக்ககூடியதென பக்தர்களின் அனுபவ மொழிகள் எடுத்து சொல்கின்றன. அவற்றில் ஒரு சிலப் பாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளது அனைத்துப் பாடல்களையும் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டு மகிழ்வதோடு அம்மன் அருளையும்பெறலாம்.அம்மன் அருளால் விளைந்த இந்த அற்புத அந்தாதியை தினம் ஓதுபவர் வாழ்வு ஒளி பெறும் என்பது திண்ணம்.




                                                                     பகுதி 1
                                                                      பகுதி 2

பிரிந்தவர் ஒன்று கூட
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

உயர்பதவிகள் பெற
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மனக் கவலை நீக்க
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

நல்ல கணவர் அமைய
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?

மரணபயம் அகல
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.

மனநோயிலிருந்து விடுபட
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

கடன் தீர
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

பிள்ளைகள் நன்கு வளர
தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே

கல்வி செல்வம் ஏனைய நல்லன பெற
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

மகப்பேறு உண்டாக
தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

மன அமைதி ஏற்பட
அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ
வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

வியாழன், 9 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 31


கஷ்டம் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம்


இது வரை சைவ வைணவத்தை சார்ந்த 30 அற்புதப் பதிகங்கள் பார்த்தோம். தற்பொழுது  இந்நூல் இல்லாத இந்து தமிழர் இல்லமே இல்லை என்னும் அளவில்அனைவரும் அறிந்திருக்கக்கூடிய கந்த சஷ்டி கவசம் பற்றி அறிவோம். ஸ்ரீ தேவராய ஸ்வாமிகளால் கந்தன் அருளால் அருளப்பட்டதே கந்த சஷ்டி கவசமாகும். நமக்கு நேரக் கூடிய அனைத்து வகைத் துன்பங்களையும் போக்கக் கூடிய அற்புத மந்திரப் பாடல். பில்லி சூனியம் பேய் பிடித்தல் மன நோய் விஷக் கடிகள் எதிரிகளால் ஏற்படும் தொல்லை என்று பல்வகையான துன்பங்களிலிருந்து நம்மை கவசம்மை காக்கு இத்திருப்பாடல். தினம் இதனை ஓதி வரும் அனைவரும் இவ்வுண்மையை அறிவர்..இப்பாடல் வரிகளோடு சூலமங்கலம் ராஜலக்ஷ்மி சகோரிகள் பாடுவதையும் அன்றாடம் கேட்டு நீங்கள் பயன் அடையலாம்.






துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்        

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக        

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக        .

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென        

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க        

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்        .

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்        

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண       

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து        

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று        

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க        

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க        

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க        

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க       

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க        

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க        

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க        

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க        

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க        

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்        

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்        .

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்        

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட        

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய        

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட        

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்       

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        .5

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்        

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்        

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா        

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே        

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்        

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்        

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்       

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய        

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்        

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்        

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை        

வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி        

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்       

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி       

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே        

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

        

K

செவ்வாய், 7 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 30


உண்மையான பக்தி இல்லையாயினும் இறையருள் பெற்றுத் தரும் பாசுரம்

உண்மையான பக்தி உணர்வு இல்லாதவர்களும்  இறையருள்  பெற வேண்டியும்  பக்தி உணர்வு பெருகி வளரவும் இறையருளால் நம்மாழ்வாரால் பாடப்பெற்றது இப்பாசுரம். இப்பாசுரப் பாராயணம் அனைவருக்கும் அளப்பற்ற நன்மைகளை அளிக்கக் கூடிய வல்லமை உடையதாம்.

கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று 
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி 
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? 
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே             
 
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே 
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல 
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் 
வானே மா நிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே             

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி 
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் 
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன் 
வெள்ளத்து அணைக்கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே?             
 
என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும் 
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து 
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் 
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே             
 
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை 
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு 
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால் 
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே             
 
புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் 
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டொழிந்தேன் 
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண் 
அறம் முயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே             
 
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ் இடத்தான்? யான் ஆர்? 
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் 
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலைபூசல் இட்டே 
மெய்ம் மால் ஆயொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே             
 
மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும் 
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் 
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் 
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே    
 
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் 
நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க 
தேவு ஆர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும் 
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே            
 
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து 
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான் ஆனான் 
மீன் ஆய் ஆமையும் ஆய் நரசிங்கமும் ஆய் குறள் ஆய் 
கான் ஆர் ஏனமும் ஆய் கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே    
 
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை 
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன 
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும் 
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே 

ஞாயிறு, 5 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 29



குழந்தைகள் குறை தீர்க்கும் பாசுரம்

பெரியாழ்வார் காருண்யனாம் கண்ணனுக்கு உள்ளம் உருகப் பாடிய தாலாட்டு. இப் பாசுரத்தினை ஓதுவதன் பயனாய் குழந்தைகள் பிணி நீங்கவும் ஆரோக்கியமாய் வாழ்வதுடன் வையத்துள்  அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது திண்ணம். பெரியாழ்வாரின் இந்த பக்தித் தமிழ் படிக்க படிக்க நெஞ்சை உருகச் செய்து இறைவனது கருணைப் பெற பெரிதும் உதவும்

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக் குறளனே தாலேலோ 
      வையம் அளந்தானே தாலேலோ             

உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ 
இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும் 
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் 
உடையாய் அழேல் அழேல் தாலேலோ 
      உலகம் அளந்தானே தாலேலோ          
 
என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் 
சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு 
இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி 
தந்து உவனாய் நின்றான் தாலேலோ 
      தாமரைக் கண்ணனே தாலேலோ            
 
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் 
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ
      தேவகி சிங்கமே தாலேலோ             

 
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று 
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு 
வழு இல் கொடையான் வயிச்சிரவணன் 
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ 
      தூமணி வண்ணனே தாலேலோ             
 
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் 
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் 
மா தக்க என்று வருணன் விடுதந்தான் 
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ 
      சுந்தரத் தோளனே தாலேலோ             
 
கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் 
வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் 
தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் 
கோனே அழேல் அழேல் தாலேலோ 
      குடந்தைக் கிடந்தானே தாலேலோ             
 
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை 
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ 
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் 
நச்சுமுலை உண்டாய் தாலேலோ 
      நாராயணா அழேல் தாலேலோ            
 
மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழேல் அழேல் தாலேலோ 
      அரங்கத்து அணையானே தாலேலோ           
 
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை  இடர்தானே      

வெள்ளி, 3 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 28


வாழ்வில் வரும் இன்னல்கள் நீக்கி வளமான வாழ்வு தரும் பாசுரம்

திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்ற "பெரிய திருமந்திரத்தின் மகிமை என்னும் இப்பாசுரத்தை துன்பம் வரும் காலங்களிலும் நோய்களினால் அவதியுறும்போதும் மனமுருக ஓதினால் துன்பங்கல் நீங்கி வளமான வாழ்வு அமையப் பெறுவர் என்பது அனுபவப் பூர்வமாக அறிந்தவர்களின் வாக்காகும்.


வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் 
      பெருந் துயர் இடும்பையில் பிறந்து 
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு 
      அவர் தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் 
      உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்       

ஆவியே அமுதே என நினைந்து உருகி 
      அவர் அவர் பணை முலை துணையாப் 
பாவியேன் உணராது எத்தனை பகலும் 
      பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் 
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் 
      சூழ் புனல் குடந்தையே தொழுது என் 
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
சேமமே வேண்டி தீவினை பெருக்கி 
      தெரிவைமார் உருவமே மருவி 
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் 
      ஒழிந்தன கழிந்த அந் நாள்கள் 
காமனார் தாதை நம்முடை அடிகள் 
      தம் அடைந்தார் மனத்து இருப்பார் 
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம் 
 
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி 
      வேல்கணார் கலவியே கருதி 
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் 
      என் செய்கேன் நெடு விசும்பு அணவும் 
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட 
      பாழியான் ஆழியான் அருளே 
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் 
      கண்டவா திரிதந்தேனேலும் 
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் 
      சிக்கெனத் திருவருள் பெற்றேன் 
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் 
      உடம்பு எலாம் கண்ண நீர் சோர 
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
      எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் 
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி 
      அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் 
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை 
      மா மணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் 
      இன்னது ஓர் தன்மை என்று உணரீர் 
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் 
      கண்டவா தொண்டரைப் பாடும் 
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் 
      சூழ் புனல் குடந்தையே தொழுமின் 
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் 
      கருத்துளே திருத்தினேன் மனத்தை 
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை 
      பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம் 
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன் 
      செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி 
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் 
      படு துயர் ஆயின எல்லாம் 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் 
      அருளொடு பெரு நிலம் அளிக்கும் 
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற 
      தாயினும் ஆயின செய்யும் 
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் 
      மங்கையார் வாள் கலிகன்றி 
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை 
      இவை கொண்டு சிக்கென தொண்டீர் 
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின் 
      துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் 
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு 
      - நாராயணா என்னும் நாமம்            

வியாழன், 2 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 27




குழந்தைப் பேறு அளிக்கும் பாசுரம்

12 ஆழ்வார்களில் ஒருவரும் நாச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர் கொடியாள்   எனவும் வைணவர்களால் பெரிதும் போற்றப்படும் ஸ்ரீ ஆண்டாள்  எம்பெருமான் மீது காதல் கொண்டு இனிய தமிழில் அளித்துள்ளப் பாசுரங்கள் அருளுடையவை மட்டுமல்ல. படிக்க படிக்க இன்பம் பயப்பனவாகும்..அவர் அருளிய திருப்பாவை அனைவரும் அறிந்த ஒன்றே. திருப்பாவைப் பாடல்கள் அனைத்தும் இவ்வலைப் பதிவில் முன்பே அளிக்கப்பட்டுள்ளது.இங்கு அளிக்கப்பட்டுள்ள அவரது திருவாய்மொழியான வாரண மாயிரம் என்ற அற்புதப் பாசுரத்தை தொடர்ந்து ஓதி வருபவர்கள் மகப் பெறு அடைவார்கள் என்பது திண்ணம்.



வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.  

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்.

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.  

செவ்வாய், 30 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 26



நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் பிறவித் தவிர்க்கவும் உதவும் பாசுரம்

நம்மாழ்வார் அருளிய இத்திருவாய்மொழிப் பாராயணம் பிணிகளின்றி வாழவும் பிறவிப் பெருங்கடல் நீந்தவும் உதவும் என்பது ஆன்றோர் வாக்கு



பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று 
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார் 
அறவனை ஆழிப்படை அந்தணனை 
மறவியை இன்றி மனத்து வைப்பாரே   
 
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத் 
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் 
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து 
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே   

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் 
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை 
தூய அமுதைப் பருகிப் பருகி என் 
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே     
 
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை 
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை 
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் 
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?   

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை 
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் 
விடவே செய்து விழிக்கும் பிரானையே?     
 
பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும் 
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் 
மராமரம் எய்த மாயவன் என்னுள் 
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?   

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் 
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து 
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் 
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?   
 
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் 
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி 
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை 
முன்னை அமரர் முழுமுதல் தானே       

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை 
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை 
அமர அழும்பத் துழாவி என் ஆவி 
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ?     
 
அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் 
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் 
பகலும் இரவும் படிந்து குடைந்தே   

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை 
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன் 
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து 
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே     

ஞாயிறு, 28 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 25




வாழ்வில் வரும் துயரம் போக்கும் பாசுரம்

நாராயணின் பக்தர்களுக்கு வரும் துயர் நீக்கும் உபாயாமாக பெரியாழ்வார் அருளிய அற்புதப் பாசுரம் இது. இதனைத் தினம் ஓதி வரும் துயர்களுக்கு விடை கொடுக்கலாம் என்பது திண்ணம்

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் 
      பேச்சும் அலந்தலையாய்ச் 
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் 
      உடுக்கவும் வல்லள் அல்லள் 
கையினில் சிறுதூதை யோடு இவள் 
      முற்றில் பிரிந்தும் இலள் 
பை அரவணைப் பள்ளியானொடு 
      கைவைத்து இவள்வருமே             

வாயிற் பல்லும் எழுந்தில மயி
      ரும் முடி கூடிற்றில 
சாய்வு இலாத குறுந்தலைச் சில 
      பிள்ளைகளோடு இணங்கி 
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் 
      தன் அன்ன செம்மை சொல்லி 
மாயன் மா மணிவண்ணன்மேல் இவள் 
      மால் உறுகின்றாளே             
 
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் 
      முற்றத்து இழைக்கலுறில் 
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் 
      அல்லது இழைக்கலுறாள் 
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில 
      கோவிந்தனோடு இவளைச் 
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும் 
      தட்டுளுப்பு ஆகின்றதே             
 
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் 
      பெண்மகளை எள்கி 
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த 
      சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் 
ஆழியான் என்னும் ஆழ மோழையில் 
      பாய்ச்சி அகப்படுத்தி 
மூழை உப்பு அறியாது என்னும் 
      மூதுரையும் இலளே             
 
நாடும் ஊரும் அறியவே போய் 
      நல்ல துழாய் அலங்கல் 
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் 
      சோதித்து உழிதர்கின்றாள் 
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் 
      கேசவனோடு இவளைப் 
பாடிகாவல் இடுமின் என்று என்று 
      பார் தடுமாறினதே             

பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் 
      பாடகமும் சிலம்பும் 
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு 
      என்னோடு இருக்கலுறாள் 
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் 
      பூவைப் பூவண்ணா என்னும் 
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் 
      மால் உறுகின்றாளே  
           
பேசவும் தரியாத பெண்மையின் 
      பேதையேன் பேதை இவள் 
கூசமின்றி நின்றார்கள் தம் எதிர் 
      கோல் கழிந்தான் மூழையாய் 
கேசவா என்றும் கேடிலீ என்றும் 
      கிஞ்சுக வாய் மொழியாள் 
வாச வார்குழல் மங்கைமீர் இவள் 
      மால் உறுகின்றாளே 

காறை பூணும் கண்ணாடி காணும் தன் 
      கையில் வளை குலுக்கும் 
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் 
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும் 
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் 
      தேவன் திறம் பிதற்றும் 
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள் 
      மால் உறுகின்றாளே             
 

கைத்தலத்து உள்ள மாடு அழியக் 
      கண்ணாலங்கள் செய்து இவளை- 
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்? 
      நம்மை வடுப்படுத்தும்- 
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன் 
      செய்வன செய்துகொள்ள 
மைத் தடமுகில் வண்ணன் பக்கல் 
      வளர விடுமின்களே             
 

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து 
      பேணி நம் இல்லத்துள்ளே 
இருத்துவான் எண்ணி நாம் இருக்க 
      இவளும் ஒன்று எண்ணுகின்றாள் 
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் 
      வார்த்தை படுவதன்முன் 
ஒருப்படுத்து இடுமின் இவளை 
      உலகளந்தான் இடைக்கே             
 

ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் 
      நாராயணனுக்கு இவள் 
மாலதாகி மகிழ்ந்தனள் என்று 
      தாய் உரை செய்ததனை 
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன் 
      விட்டுசித்தன் சொன்ன 
மாலை பத்தும் வல்லவர்கட்கு 
      இல்லை வரு துயரே             

வெள்ளி, 26 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 24



உலகம் மெச்ச வாழ வைக்கும் பாசுரம்

நாரயணனின் அருளை முழுமையாகப் பெற்றவரும் நம்மாழ்வார் என பக்தர்களால் போற்றப்பட்டவருமான சடகோபரின் இந்த திருவேங்கடப் பாசுரத்தை பக்தியுடன் ஓதுபவர்கள் உலகம் மெச்ச வாழும் வாழ்க்கைப் பேற்றினை அடைவார்கள் என்பது திண்ணம். 


ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே

எந்தைதந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் காரெழில் அண்ணலே

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச் சுனை நீர் திரு வேங்கடத்து
என்ணில்தொல் புகழ் வானவ ரிசனே

ஈசன் வானவர்க் கென்பனென்றால் அது
தேசமோ திரு வேங்கடத்தானுக்கு
நீசனே நினைவொன்றுமிலேன் எங்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே

சோதியாகி யெல்லா வுலகும் தொழும்
ஆதி மூர்த்தி யென்றா லளவாகுமோ
வேதியர் முழு வேதத்த முதத்தை
தீதில்சீர்த் திரு வேங்கடத்தானையே

வேங்கடங்கள் மெய்ம் மேல் வினைமுற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத் துறைவாருக்கு நமவென்ன
லாங்கடமை அது சுமந்தார்கட்கே

சுமந்து  மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவ்ர் கோனொடும்
நமன் றெழும் திரு வேங்கடம் நங்கட்கு
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே

குன்ற மேந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

ஓயு மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்
தாயன் நான் மலராமடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

வைத்த நாள் வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்தன் பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய்ப் பூந்தடம் தாழ்வாரே

தால் பரப்பி மண் வதாவிய ஈசனை
நீள் பொழில்குரு கூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்திப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

புதன், 24 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 23


  கல்வி மேம்பட உதவும் பாசுரம்

நம்மாழ்வார் என பக்தர்களால் அழைக்கப்படும் சடகோபரால் அருளப்பட்ட இவ்வற்புதப் பாசுர பாராயணம் கல்வியில் சிறந்து விளங்க அருள் செய்யும் என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும். நம்மாழ்வார்  இறையருளால் பாடிய பாசுரம் அன்றோ?

பெருமாள் நீள் படையாழி சங்கத்தோடு
திருமால் நீள் கழல் ஏழுலகம் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கமென் கண்ணுளதாமே

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
என்னிலும் வருமென்னினி வேண்டுவம்
மண்ணும் நீரு மெரியும் நல்வாயுவும்
விண்ணுமாய் விரியு மெம்பிரானையே

எம்பிரானையெந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தன் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனியென்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும்போதும் விடாது தொடர்க் கண்டாய்

கண்டாயே நெஞ்சமே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகமேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே

நீயும் நானுமிந் நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்க்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமா யிவ்வுலகினில்
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே

எந்தையென்று மெம்பெருமானென்று
சிந்தையுள் வைப்பன்  சொல்லுவன் பாவியேன்
எந்தையெம்பெருமானென்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

செல்வ நாரணனென்ற சொல்கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும்நன் பகலு மிடைவீடின்றி
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே

நம்பியைத்தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனேத் திகழும் திருமூர்த்தியை
உம்பர்வானவ ராதியஞ்சோதியை
எம்பிரானை யென் சொல்லி மறப்பனோ

மறப்பும் ஞானமும் நானொன்று ணர்ந்திலேன்
மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை
மறப்பனோவினி யானென்மணியையே

மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை தென்குரு கூர்ச்சடகோபன் சொல்
பணிசெயாயிரத் துல்ளி வைபத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே

செவ்வாய், 23 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 22


மனத் துயர் நீக்கும் பாசுரம்

சைவர்களுக்கு தேவாரம் திருவாசகம் போன்றதே வைணவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம். இறையருள் பெற்ற ஆழ்வார்களால் பாடப் பெர்ற இப்பாசுரங்கள் அளப்பறிய சக்தியுடையவை. பெரியதிருமொழி  பத்தாம் பத்தில் எட்டாவதாக அமையப்பெற்ற இப்பாசுரத்தை தொடர்ந்து ஓதி வருபவர்கள் மன அமைதியையும் வாழ்வில் நிம்மதியையும் பெறுவார்கள் என்பது திண்ணம்..

காதிலே கடுப்பிட்டு கலிங்கம் உடுத்து
தாதுநல்ல  தன்ணந் துழாய் கொடணிந்து
போது மறுத்துப் புறமே  வந்து நின்றீர்
ஏதுக்கு இதுவென் இதுவென் இதுவென்னோ

துவராடை உடுத்து ஒருசெண்டு சிலுப்பி
கவராக முடித்து கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவரார் இதுவென் இதுவென் இதுவென்னோ

கருகக் கொடி ஒன்றுடையீர் தனிப்பாகீர்
உருளச் சகடம் அது உறக்கில் நிமிர்ந்தீர்
மருளைக் கொடுபாடி வந்துஇல்லம் புகுந்தீர்
இருளத்து இதுவென் இதுவென் இதுவென்னோ

நாமம் பலவும் உடை நாரணன் நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமெனனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இதுவென் இதுவென் இதுவென்னோ

சுற்றும் குழல்தாழச் சரிகை அணைந்து
மற்றும் பல மாமணி பொன்கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இதுவென் இதுவென் இதுவென்னோ

ஆனாயரும் ஆனிரையும் அங்கொழியக்
கூனாயதோர் கொற்ற வில்லொன்று கையேந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன்னென்  இதுவென் இதுவென்னோ

மல்லே பொருத திரள்தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியிர் சொன்னபோதினால் வாரீர்
எல்லே இதுவென் இதுவென் இதுவென்னோ

புக்காடரவம் பிடித்தாட்டும் புனிதீர்
இக்காலங்கள் உமக்கு யாம் ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்
எக்கே இதுவென் இதுவென் இதுவென்னோ

ஆடி அசைந்து ஆய்மடவாரோடு நீ போய்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திருமாமகள் மண்மகள் நிற்ப
ஏடி இதுவென் இதுவென் இதுவென்னோ

அல்லிக் கமலக் கன்ணனை அங்கு ஓராய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தை
கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கம் இலரே






ஞாயிறு, 21 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 21



வாழ்வை மேன்மையுரச் செய்யும் பதிகம்

இதுவரை மூவர் தேவாரத்திலிருந்து சில அற்புதப் பதிகங்கள் கண்டோம்.தேவாரம் முழுமையுமே இறையருளால்  அருளப்பட்டதே என்றாலும் பக்தர்களுக்கு எளிமையாக்கும் விதத்தில் சில பதிகங்களை இங்கு பார்த்தோம்.இதன் மூலம் தேவாரம் முழுமையும் கற்கும் ஆர்வம் பெருகும் என நம்புகிறேன். இதனைப் போலவே திருவாசகப் பாடல்களும் இறைவனை அடையச் செய்யும் வல்லமை உடையவையே. நெஞ்சம் உருக தினமும் திருவாசகம் ஓதினால் வாழ்வு வளமாகும் நிச்சயம்.முழு திருவாசகமும் ஓதுதல் நன்றாயினும் , இயலாதவர்கள் சிவ புராணத்தையாவது நாளும் ஒரு முறையாவது ஓதி இறையருளைப் பெற வேண்டும்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான் 
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து