வெள்ளி, 29 ஜூலை, 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-6

அறுவகை வழிபாடு

எண்ணற்ற தெய்வங்களை அவரவ்ர் மனத்திண்மைக்கு ஏற்ப அறிமுகப்படுத்தும் இந்து மதம் , அவற்றில் முக்கியமானவையாக அறுவகை வழிபாடுகளை அறிவுறுத்துகிறது. இந்த அறுவகை வழிபாடே உட்சமயமாக ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறது. மற்றவை எல்லாம் புறச் சமயமாக கூறப்படுகிறது.சைவம்,வைணவம்,சாக்தம், காணாபத்யம்,கௌமாரம் மற்றும் சௌரம் ஆகியவையே இந்த அறுவகை வழிபாடாகும்.

சைவம் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் வழிபாட்டு முறையாகும்.மூல ப்ரம்மனை சிவன் என பெயரிட்டு வழங்கும் மார்க்கமே சைவமாகும்.சைவ மார்க்கம் இந்தியா முழுமையிலும் கடைபிடிக்கப் படுகிறது என்றாலும் தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் அதிகமாக கடைபிடிக்கப்படும் மார்க்கமாகும்.

னைத்து படைப்பிற்க்கும் மூல காரணன் விஷ்ணுவே என வழிபடும் மார்க்கம் வைணவம் ஆகும். இவரே அனைத்து உயிர்களையும் பிரபஞ்சத்தையும் மற்ற தேவர்களையும் படைத்ததாகக் கூறப்படுகிறது.விஷ்ணுவே ஒவ்வொரு யுக முடிவிலும் ஏற்படும் பிரளயத்திற்குப் பிறகு, புதிய உலகை படைக்கிறார் எனவும் நம்பப்படுகிறது.சைவத்தைப் போலவே வைணவமும்,இந்தியா முழுமையிலும் வழக்கில் உள்ள வழிபாடு முறை என்றாலும்,வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் மிகவும் பின்பற்றப்படுகின்ற மார்க்கமாகும்.

தேவி அல்லது சக்தியே அனைத்து படைப்புகளுக்கும் காரணமெனவும்,சிவன்,ப்ரம்மா,விஷ்ணு ஆகியோரையும் அவர்களுக்கு கீழ் மற்ற தெய்வங்களையும் படைத்தவள் என அறிவிக்கும் மார்க்கமாகும்.இவள் ஆதி பராசக்தி எனவும் அழைக்கப்படுகிறாள்.இந்தியாவின் முழுமைக்கும் சக்தி வழிபாடு உண்டென்றாலும், மேற்கு வங்கததில் சாக்தம் மார்க்கம் ஒரு சிறப்பான இடத்தைபிடித்துள்ளது. தெய்வத்தைப் பெண்ணாகவும் பெண்ணை த் தெய்வமாகவும் கொள்வது இந்துமதத்தின் தனி சிறப்பாகும்.

வினாயகர், பிள்ளையார்,கணேஷ் என பல பெயர்களால் அழைக்கப்படும் விக்னேஷ்வரரை முழுமுதற் கடவுளாக கொள்பவர்களின் மார்க்கமே காணாபத்யம் ஆகும். எல்லவற்றிற்கும் மூல காரணம் வினாயகர் என்பதே இம் மார்க்கத்தின் கொள்கையாகும். வினாயகர் வழிபாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை வட இந்தியாவிலும்,மஹாராஷ்டிரத்தில் மட்டுமே மிகவும் பிரபலமாயிருந்தது.அந்த வழிபாட்டு முறை மெல்ல மெல்ல பரவி இன்று இந்தியா முழுமைக்கும் மிக சிறப்பான வழிபாடாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

கந்தன்,முருகன்,குமரன் என்று எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படும் சுப்ரமணியனை முழு முதற் கடவுளாக கொண்டு வழி பாடு செய்யும் மார்க்கமே கௌமாரம் ஆகும்.முருகனே படைப்பின் மூல காரணன் , அவனே ஆதி கடவுள் என வழிபடுவது இம்மார்க்கத்தின் தன்மையாகும். கௌமார வழிபாடு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான மார்க்கமாகும்.

சூரியன் அல்லது ஜோதியை முழுமுதற் கடவுளாக கொள்ளும் மார்க்கமே சௌரம் ஆகும். இந்து மதத் தோற்றத்தின் போது சூரிய வழிபாடு,மிகவும் முக்கியமாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட பல ஞானத் தேடல்களின் காரணமாக பல் வேறு வழிபாட்டு முறைகள் வந்தன. எனவேதான் சூரியன் அல்லது ஜோதி வழிபாட்டு முறை , தனியொரு மார்க்கமாக தற்பொழுது திகழாவிட்டாலும், மற்ற அனைத்து வழிபாட்டு முறைகளிலும் இரண்டற கலந்துள்ளது.ஒரிசாவில் சூரிய வழிபாடு இன்றும் பெருமளவில் கடைபிடிக்கப்படுகிறது.

இந்து மதம் இந்த அறுவகை வழிபாட்டினையும் சமமாக ஏற்று கொண்டாலும், அந்தந்த மார்க்கத்தை பின்பற்றுகின்ற இந்துக்கள் தங்கள் மார்க்கமே உயர்ந்தது என அறியாமையின் காரணமாக நினைக்க ஆரம்பித்தார்கள். சிவனே உயர்ந்தவன் எனவும்,விஷ்ணுவே உயர்ந்தவன் எனவும், சக்தியே உயர்ந்தவள் எனவும் தங்களுக்குள் வேற்றுமை பாராட்ட ஆரம்பித்தார்கள்.இந்த வேற்றுமையின் ஊடே நாடாளும் மன்னர்கள் நுழைந்த்ததால் , இவர்களுக்குள்ளே உண்டான இந்த பூசல் பெரிதாகி, ஒருவரை ஒருவர் எதிர்க்கின்ற அவல நிலைக்கு ஆளாகினர். இதன் காரணமாகவே சைவ, வைணவப் போராட்டம் ஒரு காலத்தில் மிகப் பெரிதாக வெடித்தது. இது இந்து மதத்தின் தத்துவத்தை அறியாதவர்களாலும், அரசியல்வாதிகள் மதத்திற்குள் நுழைந்ததாலும் இது நிகழ்ந்தது.பின்னர் வந்த ஆதி சங்கரர் இந்த வேற்றுமைகளை எல்லாம் களைந்து அத்வைதம் அறிமுகம் செய்தபோது , வேற்றுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி , ஒருங்கிணைந்த இந்து மதம் புத்துணர்வு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக