செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-7

மந்த்ரங்கள்

இந்து மத வழிபாட்டில் மந்த்ரங்களுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.மந்த்ரங்கள் என்பது சில விசேஷ சொற்களின் சேர்க்கையால் பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெறுகின்ற முறையாகும்

மந்த்ரங்களை தொடர்ந்து ஜபித்து வரும்போது எண்ணற்ற ஆற்றல்கள் கிடைக்கும் என இந்து மதம் வலியுறுத்தி சொல்கிறது.மந்த்ரங்களை கீழ்காணும் மூன்று வகையாக சொல்லலாம்.

சப்ரி மந்த்ரங்கள்: இந்த வகையான மந்த்ரங்களை தொடர்ந்து ஜபித்து, த்யானம் செய்துவருபவர்கள் அஷ்டமா சித்திகள் என்று சொல்லப்படும் எட்டுவகையான சித்திகளை அடையலாம்.

தந்த்ரா மந்த்ரங்கள்: இந்த வகையான மந்த்ரங்கள் மிகுந்த கவனமுடனும் தவறின்றியும் ஜெபித்து வருவோர்க்கு உயரிய நிலையில் பல சித்திகளை அளிக்கக் கூடிய மந்த்ரங்களாகும்.

வேத மந்த்ரங்கள்: வேதங்களில் சொல்லப்படும் இந்த மந்த்ரங்கள் வெறும் உலக வாழ்க்கைக்கான மந்த்ரங்களாக இல்லாமல் முக்தி அடைவதற்க்கான மந்த்ரங்களாக கருதப்படுகிறது.

குரு மந்த்ரா: எந்த வகையான மந்த்ரங்களாக இருந்தாலும் அவற்றை ஒரு குருவின் மூலம் பெறுவதே சிறந்தது.அவ்வாறு குருவின் கருணையால் சீடர்களுக்கு உபேதேசிக்கப்படும் மந்த்ரங்கள் குரு மந்த்ரங்கள் என்று அழைக்கப்படுகிறது.குருவின் உபதேசத்தின் அடிப்படையில் பெறப்படும் இந்த மந்த்ரங்கள் சாதகர்களுக்கு நிச்சயம் மிகுந்த பலங்களை தரக்கூடியவைஆகும்

பீஜா மந்த்ரங்கள்: பீஜ மந்த்ராவை , குரு மந்த்ராவின் சாரம் என்றே சொல்லலாம். பீஜ் என்றால் சமஸ்கிருதத்தில் விதை என்று பொருள். ஒரு சிறிய விதை எப்படி வளர்ந்து பெரிய மரமாகி அனைவருக்கும், நிழல் தருகிறதோ, அதைப் போலவே, ஓரிரண்டு சொற்களில் அமைந்துள்ள இந்த பீஜா மந்த்ரங்கள் அற்புதமான ஆற்றல் பெற்றவை.க்லீம், ஸ்ரீம், ஐம், கௌம், க்ரிம் போன்ற மந்த்ரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

த்யான மந்த்ரங்கள்: த்யானத்தில் மனதினை ஒரு நிலை படுத்த பயன்படும் மந்த்ரங்கள் பல உள்ளன. இவை த்யான மந்த்ரங்கள் என்று அழைக்கப்படுகிறது.இம்மந்த்ராக்களின் மூலம் ஞானமும், சமாதி நிலையும், சாத்தியமாகிறது.

குணப்படுத்தும் மந்த்ரங்கள்: சில குறிப்பிட்ட காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் மந்த்ரங்கள் இவ்வகையை சார்ந்தவை. உதாரணமாக க்ரஹ ப்ரவேசம், திருமணம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இம்மந்த்ராக்களை கொண்டு உடல் நலம் பெறவும், பல் வகையான தோஷ நிவர்த்திகளையும் பெற முடியும்

ப்ரணவ மந்த்ரம்: ஓம் என்னும் மந்த்ரமே ப்ரணவ மந்த்ரம் என்று அழைக்கப்படுகிறது. ஒம் என்னும் மந்த்ரம் இந்து மத்தின் ஆணி வேறாக அமைந்துள்ள மந்த்ரமாகும்.வேத ஸ்லோகங்களின் ஆரம்பத்திலும், முடிவிலும் இதனை அமைத்தே உச்சரிக்கப்படுகிறது.இந்த பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்த வெளியில் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது ஓம் என்னும் இந்த ஒலி மட்டுமே என்று இந்து மதம் கூறுகிறது.இந்த பிரபஞசம் அழிக்கப்படும் போது ஏற்படும், பிரளயத்திற்கு பிறகு இந்த ஓம் என்னும் ஒலியே எஞ்சி நிற்கும்.

ப்ரணவ மந்த்ரம் அகர, உகர,மகர, பிந்து,மற்றும் நாதம் என்னும் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது.வினாயகரின் உருவமே ஓம் வடிவில் அமைந்திருப்பதை காணலாம்.இதன் காரணமாகவே பிள்ளையார் ப்ரணவ சொருபன் என்று அழைக்கப்படுகிறார். முண்டோக உபனிஷத் முழுமையிலும் ஓங்காரத்தின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் , முருகன் தன் தந்தையான சிவனுக்கு ஓங்காரத்தின் பொருள் உரைப்பது குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. ஓங்கார த்யானத்தின் மூலம் இறைவனை அடைவது எளிது என இந்து மதம் கருதுகிறது. இதனை முண்டோக உப நிஷத் " ஓம் என்பது வில்; ஆன்மாவே அன்பு;இறைவனே அதன் குறி" என அழகக விளக்குகிறது.

ராமகிருஷ்ண பரம ஹம்சரும்" அலைகளின் சப்ததை கொண்டு கடல் இருக்கும் இடத்தை அறிய முடிவது போல், ஓங்கார த்யானத்தின் மூலம் இறைவனை காணலாம்" என குறிப்பிடுகிறார்.பகவான் ரமண மகரிஷியும்" ஓங்காரமே அனைத்து மந்த்ரங்களின் சாரமாகும். இதனைத் தொடர்ந்து த்யானிப்பதால்சமாதி நிலையினையும் அதனைத் தொடர்ந்து மோட்ச்சத்தையும் அடையலாம்" என கூறுகிறார். ஓங்காரம் சேர்த்து சொல்லப்படும் மந்த்ரங்கள் அனைத்தும் வலிமையுடையனவாக மாறுகின்றன.

பஞ்சாக்க்ஷர மந்த்ரா: சிவனுக்கான ஓம் நம சிவாய என்னும் பஞ்சாக்க்ஷர மந்த்ரமும் விஷ்ணுவிற்க்கான ஓம் நமோ நாராயணா என்னும் மந்த்ரமும் மிகவும் முக்கியம் வாய்ந்த மந்த்ரங்களாகும்.இந்த மந்த்ர த்யானத்தின் மூலம் ஞானம் பிறக்கும் என நம்பப்படுகிறது

காயத்ரி மந்த்ரம்: விஸ்வாமித்ரரால் வடிவமைக்கப்பட்ட காயத்ரி மந்த்ரம் மிகுந்த சக்தியுடையதாம். காயத்ரி மந்திரம் தொடர்ந்து ஜபிக்கப்படும்போது வாழ்வின் அத்தனை சௌகரியங்களும் கிடைத்து வெற்றி பெறுவார்கள். ஆனால் மந்த்ரத்தை சரியான முறையில் உச்சரிப்பது அவசியமாகும்.

.ம்ருத்யுஞ்ச மந்த்ரம்: மரணத்தை வெல்லக் கூடிய சிவனுக்கான இம்மந்த்ரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் உடல் நலமுரவும், மரணத்தை வெல்லவும் இயலும். இந்து மந்த்ரங்களில் இதுவும் ஒரு முக்கியமான மந்த்ரமாகும்.

Oom Tryambakam Yajamahey ஓம் த்ரையம்பகம் யஜாமஹே

Sugandhim Pushtivardhanam சுகந்திம் புஷ்டிவர்தனம்

Urvaaruka Meeva Bhandanaath உர்வாருக மீவா பண்டனாத்

Mruthyor Mokshayah Mamrutat ம்ருதுயொய் மோக்ஷயா மம்ருடட்

இந்த மந்த்ரம் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவில் இங்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், சமஸ்கிருதம் அறிந்த ஒருவர் மூலம் இதன் சரியான உச்சரிப்பை ஜெபித்து வரும்போது உறுதியான பலன்கள் கிடைக்கும்

அன்றாட வாழ்விற்க்குத் தேவையான சில பீஜ மந்த்ரங்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இவற்றை உரிய முறையில் ஜெபித்து பயன் பெறலாம்

செல்வம்,வாழ்க்கை வளம் இவற்றைப் பெற ஓம் ஸ்ரீம் ஓம்

மற்றவர்களை கவர்ந்து, பிரபலமாகவும்,

தலைவர்கள் ஆகவும் ஓம் க்ரீம் ஓம்

வியாதிகளிடமிருந்து நிவாரணம் பெற ஓம் க்லீம் ஓம்

கல்வி, தேர்வு, பதவி உயர்வு ஓம் ஐம் ஓம்

பயம்போக்கிட ஓம் ஹம் ஓம்

தாம்பத்ய வாழ்வு சிறக்க ஒம் சாம் ஓம்

மரணத்தை வெல்லும் ம்ருத்யுஞ்செய

மந்த்ரத்தின் பீஜா மந்த்ரம் ஓம் ஜும் சஹா

இது போன்று எண்ணற்ற மந்த்ரங்கள் இந்து மதத்தில் உண்டு. இவற்றை ஜெபித்து பயன் பெற்று வருபவர்கள் ஏராளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக