செவ்வாய், 30 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 26



நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் பிறவித் தவிர்க்கவும் உதவும் பாசுரம்

நம்மாழ்வார் அருளிய இத்திருவாய்மொழிப் பாராயணம் பிணிகளின்றி வாழவும் பிறவிப் பெருங்கடல் நீந்தவும் உதவும் என்பது ஆன்றோர் வாக்கு



பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று 
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார் 
அறவனை ஆழிப்படை அந்தணனை 
மறவியை இன்றி மனத்து வைப்பாரே   
 
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத் 
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் 
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து 
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே   

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் 
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை 
தூய அமுதைப் பருகிப் பருகி என் 
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே     
 
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை 
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை 
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் 
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?   

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை 
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் 
விடவே செய்து விழிக்கும் பிரானையே?     
 
பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும் 
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் 
மராமரம் எய்த மாயவன் என்னுள் 
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?   

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் 
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து 
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் 
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?   
 
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் 
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி 
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை 
முன்னை அமரர் முழுமுதல் தானே       

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை 
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை 
அமர அழும்பத் துழாவி என் ஆவி 
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ?     
 
அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் 
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் 
பகலும் இரவும் படிந்து குடைந்தே   

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை 
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன் 
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து 
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக