வெள்ளி, 26 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 24



உலகம் மெச்ச வாழ வைக்கும் பாசுரம்

நாரயணனின் அருளை முழுமையாகப் பெற்றவரும் நம்மாழ்வார் என பக்தர்களால் போற்றப்பட்டவருமான சடகோபரின் இந்த திருவேங்கடப் பாசுரத்தை பக்தியுடன் ஓதுபவர்கள் உலகம் மெச்ச வாழும் வாழ்க்கைப் பேற்றினை அடைவார்கள் என்பது திண்ணம். 


ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே

எந்தைதந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் காரெழில் அண்ணலே

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச் சுனை நீர் திரு வேங்கடத்து
என்ணில்தொல் புகழ் வானவ ரிசனே

ஈசன் வானவர்க் கென்பனென்றால் அது
தேசமோ திரு வேங்கடத்தானுக்கு
நீசனே நினைவொன்றுமிலேன் எங்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே

சோதியாகி யெல்லா வுலகும் தொழும்
ஆதி மூர்த்தி யென்றா லளவாகுமோ
வேதியர் முழு வேதத்த முதத்தை
தீதில்சீர்த் திரு வேங்கடத்தானையே

வேங்கடங்கள் மெய்ம் மேல் வினைமுற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத் துறைவாருக்கு நமவென்ன
லாங்கடமை அது சுமந்தார்கட்கே

சுமந்து  மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவ்ர் கோனொடும்
நமன் றெழும் திரு வேங்கடம் நங்கட்கு
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே

குன்ற மேந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

ஓயு மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்
தாயன் நான் மலராமடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

வைத்த நாள் வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்தன் பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய்ப் பூந்தடம் தாழ்வாரே

தால் பரப்பி மண் வதாவிய ஈசனை
நீள் பொழில்குரு கூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்திப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக