ஞாயிறு, 7 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 15


உடல் காக்கும் பதிகம்

நாவுக்கரசர் உடல் உறுப்புகளின் பயனே உமையொரு பாகனை வழிபடுதலே என உணர்த்தப் பாடிய பதிகம். இப்பதிகத்தை தொடர்ந்து பாராயணம் செய்பவருக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் இன்னல்கள் நீங்குவது நிச்சயம்

தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

கண்காள் காண்மின்களோ - கடல் 
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 
செவிகள் கேண்மின்களோ

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீநினையாய் - நிமிர் 
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி 
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் 
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 
வாக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் - கறைக் 
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 
கால்க ளாற்பயனென்.

உற்றா ராருளரோ - உயிர் 
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ.

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் 
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ.

தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 
தேடிக் கண்டுகொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக